கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகிலுள்ள குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு மிருத்ஞ்சய் ஹோமம், காலை 7 மணிக்கு கோமாதா பூஜை, காலை 9 மணிக்கு சங்குபூஜை, காலை 10.30 மணிக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பிற்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 12.30 மணிக்கு ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் வாகன பவனி, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை குகநாதீஸ்வரர் பக்தர்கள் சங்கத் தலைவர் எம்.கோபி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.