பார்வதிபுரத்தில் ரூ. 9 லட்சத்தில் குடிநீர்த் திட்டப் பணி

ஆளூர் பேரூராட்சி, பார்வதிபுரம் எஸ்.எஸ். நகரில்  ரூ .9 லட்சம்  மதிப்பில் அமைக்கப்படவுள்ள புதிய குடிநீர்த் திட்டப் பணியை குளச்சல் எம்.எல்.ஏ.  தொடங்கிவைத்தார்.

ஆளூர் பேரூராட்சி, பார்வதிபுரம் எஸ்.எஸ். நகரில்  ரூ .9 லட்சம்  மதிப்பில் அமைக்கப்படவுள்ள புதிய குடிநீர்த் திட்டப் பணியை குளச்சல் எம்.எல்.ஏ.  தொடங்கிவைத்தார்.
பார்வதிபுரம் எஸ்.எஸ். நகரில்  தண்ணீர்பற்றாக்குறை இருப்பதாகவும், இப்பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க  நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனவும்  பொதுமக்கள் சார்பில் ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏவிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து,  சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 9 லட்சம் நிதியை அவர் ஒதுக்கீடு செய்தார்.  இதையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.   புதிய குடிநீர்த் திட்டப் பணியை எம்எல்ஏ  தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி முன்னாள்துணைத் தலைவர் செய்யது மசூது முன்னிலை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெரால்டு கென்னடி, சாமுவேல் சேகர்,  தாணு மூர்த்தி,  சைமன் செல்வராஜ்,  ஜேம்ஸ், ஜாகிர்உசைன்,  ஷாகினா,  எஸ்.எஸ்.நகர்  தலைவர்  பாலசங்கரன்தம்பி,  செயலர் அன்பரசு,  பொருளாளர் முத்தையா பாலன்,  ஐயப்பன், நீதிவில்லியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com