திருவட்டாறு அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவட்டாறு அருகே படகசேரி ஆற்றங்கரையில் மணல் திருடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று திருவட்டாறு போலீஸார் ஆய்வு செய்தபோது, 3 பேர் ஆற்றில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். போலீஸாரை கண்டதும் தப்பி செல்ல முயன்ற இளைஞர்களை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், படகசேரி பகுதியைச் சேர்ந்த சுபின், (23), வினு (28), சாஜின்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரையும்போலீஸார் கைது செய்தனர். மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.