தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் புகைப்படக் கலைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறை கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் மற்றும் நாகர்கோவில் நிழல் ஸ்டுடியோ இணைந்து இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்தின. இதில் 100-க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் பயிற்சி பெற்றனர்.
புகைப்பட பயிற்சியாளர் சாய் ரகுநாத் பயிற்சியளித்தார். விடியோ போட்டோ கிராபர் சங்க மாநிலச் செயலர் கண்ணன், மாநில அமைப்பாளர் பாபு, குமரி மாவட்டத் தலைவர் ரவீந்திரன், செயலர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திறந்த நிலைப் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் (திரைப்படம்) சி.கார்த்திகேயன் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.