கேரள மாநில பாரதீய மஸ்தூர் ஆயுள் காப்பீடு முகவர்கள் சங்க நிர்வாகிகள் 2 நாள் கூட்டம் கன்னியாகுமரியில் சனிக்கிழமை நிறைவடைந்தது.
கூட்டத்துக்கு மாநிலச் செயலர் பி.சசிதரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் எம்.உல்லாஸ் ஆயுள் காப்பீடு முகவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும், தீர்வும் என்ற தலைப்பில் பேசினார். அமைப்புச் செயலர் சி.வி.ராஜேஷ் விளக்கவுரையாற்றினார். முகவர்களுக்கு வி.என்.கிருஷ்ணபிரசாத் பயிற்சியளித்தார்.
இக்கூட்டத்தில் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் காப்பீடு ஊழியர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. பிற நிறுவனங்களைப்போல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைச் செயலர் எஸ்.ஸ்ரீ குமார் நன்றி கூறினார்.