குளச்சலில் காரில் கடத்தப்பட்ட ரேஷன் மண்ணெண்ணெய் பறிமுதல்

குளச்சல் அருகே காரில் கடத்தப்பட்ட ரேஷன் மண்ணெண்ணெயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

குளச்சல் அருகே காரில் கடத்தப்பட்ட ரேஷன் மண்ணெண்ணெயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
குளச்சல் காவல் ஆய்வாளர் முத்துகுமரன் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை காலை செம்பொன்விளை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீஸார் தடுத்தனர். கார் நிற்காததையடுத்து, துரத்திச் சென்று முக்காடு அருகில் போலீஸார் காரை மடக்கி, அதில் சோதனையிட்ட போது, அதில் ல் 25 கேன்களில் 875 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com