விநாடி-வினா போட்டி: என்.ஐ. கல்லூரி சிறப்பிடம்

அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலா விநாடி- வினா மற்றும் தகவல் தொடர்பு

அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலா விநாடி- வினா மற்றும் தகவல் தொடர்பு போட்டிகளில் குமாரகோவில் என்.ஐ. கலை அறிவியல் கல்லூரி முதல் பரிசு பெற்றது.
செயின்ட் ஜான்ஸ் கலைக் கல்லூரியின் பிசிஏ துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில், என்.ஐ. கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ரீகானா பாத்திமா, சிவதர்ஷினி ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். டெக்னிக்கல் டாக் போட்டியில் பிரியதர்ஷினி இரண்டாம் பரிசு வென்றார். மாணவிகளை கல்லூரி முதல்வர் எஸ்.பெருமாள், கல்லூரித் தாளாளர் ஏ.பி.மஜீத்கான், மனிதவள மேம்பாட்டு இயக்குநர் கே.ஏ. ஜனார்த்தனன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com