மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்சலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ராஜபாளையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓபன் செஸ் போட்டியில் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வின்ஸ் சிபிஎஸ்இ மாணவர் ஜெய்வந் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் மதுரையில் நடைபெற்ற 21-ஆவது தமிழ்நாடு ரேப்பிட் சேம்பியன் சிப் போட்டியில் பங்கேற்று 3-வது இடம் பெற்றுள்ளார். செஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்ற இம் மாணவரை, வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் நாஞ்சில் வென்ட் சான்றிதழும், கோப்பையும் வழங்கி கௌரவித்தார். பள்ளிச் செயலர் கிளாரிசா வின்சென்ட் , பள்ளி முதல்வர் பார்வதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.