பம்மம் கோயிலில் இன்று ஜெப வேள்வி பயிற்சி முகாம்

மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழ் பம்மம் ஆதிமூலை இசக்கிஅம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) நவராத்திரி

மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழ் பம்மம் ஆதிமூலை இசக்கிஅம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 17) நவராத்திரி பூஜையையொட்டி சரஸ்வதி நாம ஜெபவேள்வி நடத்துவதற்கான பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
குழித்துறை ஒன்றிய தர்ம ரக்ஷண சமிதி சார்பில் நடைபெறும் இந் நிகழ்ச்சி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இம் முகாமில் பங்கேற்பவர்களுக்கு நெய் மற்றும் சரஸ்வதி நாம ஜெப வேள்விக்கான பயிற்சி ஏடு ஆகியன வழங்கப்படும்.
மாணவ, மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற இந்த ஜெப வேள்வி நடத்தப்படுவதாகவும், இதில் அனைத்துப் பகுதி இந்து ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் குழித்துறை ஒன்றிய தர்ம ரக்ஷண சமிதி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com