கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்க 7ஆவது மாநில பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். குமரி மாவட்டத் தலைவர் கனக சபாபதி வரவேற்றார்.
மாநில பொதுச் செயலர் சிங்காரம் முனிரத்னம், பொருளாளர் நாகராஜன், செயலர் மூர்த்தி, இணைச் செயலர்கள் பிரபாகரன், விவேகானந்தன், சங்க தலைமை நிலையச் செயலர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.
விவேகானந்த கேந்திர சித்தவர்ம சிகிச்சை மருத்துவர் வே.கணபதி சிறப்புரையாற்றினார். மாநில பிரசார அணி செயலர் ஆனந்த் தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செயலர் நாகராஜன் நன்றி கூறினார்.