அடைக்காகுழி கிராமத்தில் மனுநீதித் திட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஏப். 17) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளவங்கோடு வட்டம், அடைக்காகுழி அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமில் மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை (ஏப். 17) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, அடைக்காகுழி ஊராட்சி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.