கன்னியாகுமரியில் மழையால் சேதமடைந்த கடற்கரைச் சாலை சீரமைக்கப்பட்டது.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய அஸ்தமனப் பூங்கா செல்லும் கடற்கரைச் சாலையில் சிலுவை நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இவ்வழியே நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்வதால் இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து விரிசல் ஏற்பட்ட பகுதியில் மணல் நிரப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஓரிரு நாள்களில் இப்பணி முழுவதும் நிறைவடையும்.