பாலியல் வன்முறைக்கு எதிராக கருங்கல்லில் காங்கிரஸ் பேரணி

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை எதிர்ப்பு பேரணி கருங்கல்லில் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை எதிர்ப்பு பேரணி கருங்கல்லில் நடைபெற்றது.
பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை கண்டித்தும்,  பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இப்பேரணிக்கு, மாவட்டத் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.    தலைமை வகித்தார். பேரூர் தலைவர் குமரேசன், வட்டாரத் தலைவர்கள் டென்னிஸ், பால்ராஜ், கிறிஸ்டோபர், ஜெகன் ராஜ்,  ஜான் கிறிஸ்டோபர்,  என்.ஏ. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜீவ்காந்தி சந்திப்பில் தொடங்கிய பேரணி, கருமாவிளை, பேருந்துநிலையம் வழியாக கருங்கல் ஆட்டோ நிலையம் வந்தடைந்தது.
இதில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், தம்பி விஜயகுமார், சில்வஸ்டர், எட்வர்ட், மாவட்ட துணைத் தலைவர் பால்மணி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ், மாவட்ட சேவாதள தலைவர் லாரன்ஸ், இளைஞர் காங்கிரஸ் தொகுதித் தலைவர் ஜோப்ளின் சிறில்,  சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com