களியக்காவிளை அருகேயுள்ள மெதுகும்மல் ஊராட்சி பொன்னப்பநகர் பகுதியில் கான்கிரீட் தளத்துடன் கூடிய புதிய சாலை திறக்கப்பட்டது.
பொன்னப்பநகரில் கான்கிரீட் தளத்துடன் கூடிய புதிய சாலை அமைக்க பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இச்சாலை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. சாலை திறப்பு விழாவுக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி. சிம்சன் முன்னிலை வகித்தார். எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கிளைத் தலைவர் செல்வராஜ், முன்சிறை வட்டாரத் தலைவர் கிறிஸ்டோபர், கட்சி நிர்வாகிகள் பிராங்கிளின், சுனில், கதிரேசன், ரவீந்திரன், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.