அருமனை அருகே தேவாலயத்தில் நகை மற்றும் பணத்தைத் திருடிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.
அருமனை முதப்பன்கோடு பகுதியில் லூர்துகிரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அலுவலகத்தில், அதே பகுதியைச் சேர்ந்த விஜி என்ற சிவா புகுந்து, அங்கு மேசையில் வைக்கப்படிருந்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், அரைப் பவுன் மோதிரம் மற்றும் மடிக்கணியைத் திருடி விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரைப் பிடித்த அப்பகுதி மக்கள், அருமனை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.