நாகர்கோவில் இருளப்பபுரத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கவிஞர் உமா கண்ணன் எழுதிய "மொழி மறந்த மௌனங்கள்' என்ற இந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, அறிவியல் விஞ்ஞானி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். எழுத்தாளர் பொன்னீலன் நூலை வெளியிட, ரங்கபாய் சதாசிவம், பேராசிரியர் மரியக்குட்டிக்கண், புலவர் வே.ராமசாமி, மருத்துவர் சிதம்பர நடராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
வழக்குரைஞர்கள் ராஜகோபால், ரத்தினசாமி, பன்னாட்டு தமிழுறவு மன்றத் தலைவர் தியாகி கோ.முத்துக்கருப்பன், பால்நாடார், சண்முகசுந்தரம், கீழப்பாவூர் சண்முகையா, குறளக நிறுவனர் தமிழ்க்குழவி, கவிஞர் குற்றாலதாசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
கவிஞர் கடிகை ஆன்றனி, பேராசிரியர் ராஜாராம் ஆகியோர் நூல் மதிப்புரை வழங்கினர். உமாகண்ணன் ஏற்புரையாற்றினார்.
ஏற்பாடுகளை தெற்கு எழுத்தாளர் இயக்கத்தினர் செய்திருந்தனர்.