நாகர்கோவிலில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், காவலர்கள் நண்பர்கள் இயக்கம் 26ஆவது ஆண்டு

சுரபி கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், காவலர்கள் நண்பர்கள் இயக்கம் 26ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சமூக காவலர்கள் பேரணி  நாகர்கோவில்  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
பேரணிக்கு, காவலர்கள் நண்பர்கள் இயக்க நிறுவனர் ஏடிஜிபி பிரதீப்பிலிப் தலைமை வகித்தார். பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே கொடியசைத்து தொடங்கிவைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் முன்னிலை வகித்தார். சுரபி அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் பேரணியை வழிநடத்தினார். பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் நண்பர்கள் இயக்கத்தின் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com