நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரி சுகாதார ஆய்வாளர் பயிற்சி மாணவர்கள், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த மாணவர்கள் அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர் மற்றும் மேல்புறம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு களப் பணியை மேற்கொண்டனர். இதில், கல்லூரி நிர்வாக அலுவலர் நடராஜன், பேராசிரியர்கள் அய்யப்பன், துரைராஜ், ரங்கசாமி, சிவதாணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.