கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கோட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப். 14) நடைபெற உள்ளது.
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் தலைமையில் மாலை 3 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளனர். இந்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பயனடைய வேண்டும்.
ஏற்கெனவே, செவ்வாய்க்கிழமை நடைபெற வேண்டிய மாதாந்திர குறைதீர் கூட்டம், உள்ளூர் விடுமுறை காரணமாக அடுத்த வார செவ்வாய்க்கிழமைக்கு ( பிப். 20) மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.