கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.16) மூன்று வட்டங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
அகஸ்தீசுவரம் வட்டத்தில் நாகர்கோவில் வடக்கு வருவாய் கிராமத்திற்கு, நாகர்கோவில், எஸ்.எல்.பி, அரசு மேல்நிலைப் பள்ளி, கல்குளம் வட்டத்தில் கல்குளம் வருவாய் கிராமத்திற்கு, கல்குளம், கிராம நிர்வாக அலுவலகம், விளவங்கோடு வட்டத்தில் களியல் வருவாய் கிராமத்திற்கு, களியல், செயின்ட் மோசஸ் மேல்நிலைப் பள்ளியிலும் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குள்பட்ட நிலப் பிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை பொதுமக்கள் அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.