கன்னியாகுமரி அருகே நள்ளிரவு வீடுபுகுந்து மடிக்கணினி திருடியதாக, இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில், பிலோமினாள் என்பவரது வீட்டினுள் மர்மநபர் ஒருவர் புதன்கிழமை புகுந்து, அங்கிருந்த மடிக்கணினியைத் திருடிக்கொண்டு வெளியே ஓடினாராம்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் அவரை வளைத்துப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், அகஸ்தீசுவரம் அம்மன் கோயில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (27) என்பதும், மடிக்கணினியை திருடியதும் தெரியவந்ததாம். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.