நாகர்கோவில் அருகே பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவிலை அடுத்த பறக்கை பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுமி அதே பகுதியில் ஒரு பள்ளியில் படித்து வருகிறார். வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி செல்வம்(50) சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதவி ஆய்வாளர் சாந்தி வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்து விசாரிக்கிறார்.