களக்காடு அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

களக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

களக்காடு அருகே ஞாயிற்றுக்கிழமை கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் சீவலப்பேரியன் கால்வாயையொட்டி ஊய்க்காட்டு சுடலை மாடசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இது தொடர்பாக கோயில் நிர்வாகி சுப்பையா களக்காடு போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com