கோட்டையடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சாமிதோப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையின் இரு ஓரங்களிலும் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் சார்பில் கோட்டையடியில் சனிக்கிழமை

சாமிதோப்பு அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையின் இரு ஓரங்களிலும் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தி அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் சார்பில் கோட்டையடியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாமிதோப்பை அடுத்த பொற்றையடி சந்திப்பில் இருந்து ஆண்டிவிளை வரையிலான வெங்கலராஜன் கோட்டை சானல் சாலை மிகவும் பழுதடைந்தநிலையில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்தச் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த சிலநாள்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. எனினும் சாலையின் இரு ஓரத்திலும் உள்ள பள்ளமான பகுதிகள் நிரப்பப்படாததால் சாலை பழுதடைந்ததோடு அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.
இந்நிலையில் சாலையோரத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை வலியுறுத்தி அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் சார்பில் கோட்டையடி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் எஸ்.பி.ராஜஜெகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஐயாப்பழம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டேனியல் வரவேற்றார்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் செல்லத்துரை, கொட்டாரம் நகரத் தலைவர் அரிகிருஷ்ணபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com