கன்னியாகுமரி சரக்குப் பெட்டக முனைய ஆதரவாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை சந்தையடியில் நடைபெற்றது.
சமூக ஆர்வலர் அதிவீரபாண்டியன் தலைமை வகித்தார். அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்னன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட பாஜக ஒருங்கிணைப்பாளர் வேல்பாண்டியன், மாவட்ட முன்னாள் தலைவர் கணேசன், வழக்குரைஞர் ராஜேஷ், துவாரகாபதி தர்மகர்த்தா குமரேசன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி, அகஸ்தீசுவரம் ஒன்றிய சமக செயலர் ரமேஷ், சமூக ஆர்வலர்கள் ஆதிநாதசுந்தரம், முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், அனைத்து பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சரக்குப் பெட்டக முனையம் தொடர்பாக விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்வது, பிப்ரவரி 18-ஆம் தேதி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலம் முன்பு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.