ஜன.19 இல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை(ஜன.19)  நடைபெறுகிறது.

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை(ஜன.19)  நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:    கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜன.19  ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.  
  மீன்வளத்துறை மற்றும் இதர அரசு துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை இக்கூட்டத்தில் நேரில் வழங்கலாம். பிற அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். 
  ஜன.19 இ ல்  பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.  மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள்  கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுகத்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com