நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் தேரோட்ட திருவிழாவினை" முன்னிட்டு ஜன.31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோயில் தேரோட்ட திருவிழா ஜன.31 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு ஈடாக பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை (பிப்.10) மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.
மேலும். ஜன.31 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.