மரியா சித்த மருத்துவக் கல்லூரியில் சித்தர்கள் பிறந்த தினம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மரியா கல்விக் குழுமங்களின் தலைவர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்து சித்தர் படங்களுக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் ஷைனி தெரஸா முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஹரிஹரசுப்பிரமணி வரவேற்றார்.
தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலை, சித்தர் மரபு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர்கள் பேசினர். தொடர்ந்து பொங்கலிடப்பட்டது.
நிகழ்ச்சியில், மரியா பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். துணை கண்காணிப்பாளர் சாபு குமார் நன்றி கூறினார்.