மார்த்தாண்டம் ரயில் நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை

மார்த்தாண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்த்தாண்டம் ரயில் நிலையம் செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றநிலையில் உள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் திரும்பும் பகுதியில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும், மார்த்தாண்டத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பெரும்பாலும் வாகனங்கள் ரயில்நிலையம் செல்லும் சாலையில்தான் இயக்கப்படுகின்றன. எனவே,பொதுமக்கள் நலன் கருதி இச்சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com