ராஜாக்கமங்கலம் அருகே கோயில் உண்டியலை உடைத்து 15  பவுன் நகை திருட்டு

குமரி மாவட்டம்,  ராஜாக்கமங்கலம் அருகே  அம்மன் கோயில் உண்டியலை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம்,  ராஜாக்கமங்கலம் அருகே  அம்மன் கோயில் உண்டியலை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள சூரப்பள்ளம் பகுதியில் மஞ்சாடி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புதியதாக கட்டப்பட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோயிலின் அருகில் 2 அறைகள் கட்டப்பட்டு கோயிலில் உள்ள பொருள்கள் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் சாமி சிலைகளை வைத்து பூஜை செய்து வருகின்றனர். கோயிலின் பூசாரியாக சுபாஷ் என்பவர் இருந்து வருகிறார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அங்கிருந்த அறைகளில் ஒன்றில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து, பூசாரிக்கும், நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.  அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, அந்த அறையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த  15 பவுன் நகைகள் திருட்டுப்போனது  தெரியவந்தது. 
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மோப்ப நாயுடன் சென்று காவல் துறையினர் விசாரித்தனர். மேலும், உடைக்கப்பட்ட கதவு மற்றும் லாக்கரை மோப்பம் பிடித்த  நாய் அந்தப் பகுதியில் உள்ள குளத்தின் கரையில் கிடந்த இரும்பு கம்பி ஒன்றை கவ்வியது. 
இதையடுத்து காவல் துறையினர் அந்த கம்பியைக் கைப்பற்றினர். பின்னர், விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com