கருங்கலில் திராவிட கழகம் சார்பில் பெரியாரின் துணைவியார் மணியம்மையின் நினைவு தின பிரசாரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிள்ளியூர் ஒன்றியத் தலைவர் சாம்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ராஜீவ்லால், நல்லபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை ஈரா.பெரியார்செல்வன் சிறப்புரையாற்றினார். இதில், மண்டலச் செயலர் வெற்றிவேந்தன், தயான், கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.