தக்கலையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்தக்கலையில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் வட்டாரச் செயலர் சுஜா ஜாஸ்மின் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் தொடங்கிவைத்தார்.
வட்டாரக் குழு உறுப்பினர் ஜாண்சௌந்தர்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் உஷாபாசி, முருகேசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காளிபிரசாத், அரங்கசாமி, முரளீதரன், லீலா, பேபி, கே.மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com