எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 10ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றியை தவற விட்ட மாணவர்கள் மனம் கலங்கிட தேவை இல்லை. மீண்டும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே மாணவர்கள் எந்த வித விபரீத எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.