குமரி பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திமுக பொறியாளர் அணி சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திமுக பொறியாளர் அணி சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமை வகித்தார். மாநில திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், எம்.எல்.ஏ.க்கள் என்.சுரேஷ்ராஜன், எஸ்.ஆஸ்டின், திமுக நிர்வாகிகள் என்.தாமரைபாரதி, கே.முத்துசுவாமி, கன்னியாகுமரி பங்குத்தந்தை ஜோசப் ரொமால்டு, புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை திரேஸ் தேன்மொழி, பங்குப்பேரவை துணைத் தலைவர் லியோன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து 12-ஆம் வகுப்பு தேறியவர்கள் மேற்கொண்டு என்னபடிக்கலாம் என்பது குறித்த கையேடுகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com