செண்பகராமன்புதூரில் பொதுமக்கள் குடத்துடன் தர்னா

செண்பகராமன்புதூரில் குடிநீர் வராததால் பொதுமக்கள் குடத்துடன் தர்னாவில் ஈடுபட்டனர்.

செண்பகராமன்புதூரில் குடிநீர் வராததால் பொதுமக்கள் குடத்துடன் தர்னாவில் ஈடுபட்டனர்.
செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட  பி.சி .காலனியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்காக பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்நிலையில் கடந்த 13 நாள்களாக இப்பகுதியில் தண்ணீர் விநியோகிக்கவில்லையாம். இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்ட பின்பும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில் புதன்கிழமை முன்னாள் ஊராட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை, முன்னாள்வார்டு உறுப்பினர் தேவதாஸ் ஆகியோர் தலைமையில் அப்பகுதி பெண்கள் குடத்துடன் சமத்துவபுரம் நுழைவு வாயில் அருகே அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com