இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 25) 2 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 25) 2 வட்டங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட சிறப்பு முகாம், கல்குளம் வட்டத்தில் குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டத்தில் ஏழுதேசம் வருவாய் கிராமத்துக்கு, லெட்சுமி புதுக்கடை அரசு நடுநிலைப் பள்ளியிலும் வெள்ளிக்கிழமை (மே 25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்துக்குள்பட்ட நில பிரச்னைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை அளித்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com