நாகர்கோவில் அருகே வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.
நாகர்கோவிலை அடுத்த பூச்சிவிளாகம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், தங்கநாடாச்சி (87) என்ற மூதாட்டி பலத்த காயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.