கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி பேரூராட்சியில் தொழில் வரி, குடிநீர் கட்டணம், வீட்டு வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க வலியுறுத்தி கன்னியாகுமரி பேரூர் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை வகித்தார். அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவர் ராஜஜெகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில், நிர்வாகிகள் ஏ.எம்.டி.செல்லத்துரை, சோரீஸ், பாக்கியசெல்வம், ஐயாப்பழம், நெப்போலியன், வேலப்பன், அரிகிருஷ்ணபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.