குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச் சாவடி பிரதிநிதிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை(அக்.14) நடைபெறுகிறது.
இதுகுறித்து குமரி மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை.
குமரி மேற்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடிகள் பிரதிநிதிகள் கூட்டம் அக்,14 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சுவாமியார்மடத்தில் உள்ள வசந்த மாளிகை மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பளருமான சஞ்சய்தத் பேசுகிறார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து சாங்கை பகுதியில் உள்ள மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து துணை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் வட்டார, நகர, வார்டு கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து அவர் கருத்து கேட்கிறார். எனவே அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.