குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (அக்.15) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை களைந்திட சிறப்பு குறைதீர் நாள் திங்கள்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் அளிக்கும் மனுக்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.