கருங்கல் அருகே மின்னல் பாய்ந்து வீடு, மின் சாதன பொருள்கள் சேதம்

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் மின்னல் பாய்ந்து வீடு மற்றும் 50-க்கும் மேற்பட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் மின்னல் பாய்ந்து வீடு மற்றும் 50-க்கும் மேற்பட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மத்திகோடு, மாத்திரவிளை, காட்டுகுளம், மூவர்புரம், அரித்திரானவிளை உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், மின்மோட்டார், டிவி, மின்விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
மேலும், மத்திகோடு பகுதியைச் சேர்ந்த ஜான்போஸ்கோ(45) என்பவரது வீட்டில் மின்னல் பாய்ந்து, வீட்டின் முன் பகுதியில் கீரல் விழுந்து சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com