தக்கலை அரசுப் பள்ளியில் புதுமண தம்பதிகளுக்கான பயிலரங்கம்

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  புதுமண தம்பதிகளுக்கான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  புதுமண தம்பதிகளுக்கான பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் தக்கலை ஊராட்சி ஒன்றியம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையர் மூர்த்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் கல்யாணசுந்தரி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான் விஜயன், பத்மநாபபுரம் நகர்ப்புற மருத்துவ அலுவலர் லாரன்ஸ்  ஆகியோர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்தனர். 
நிகழ்ச்சியில், புதுமண தம்பதிகள், குழந்தைகள் நலத் திட்ட அலுவலர் சரோஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார்,  நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com