பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

நாகர்கோவில் அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆசீர்வாதம் மனைவி ரோஸ்லின் (60). இவர், செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பேருந்தில் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது  தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிப்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து, தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com