கன்னியாகுமரியில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அமைப்பு சார்பில் கருத்தரங்கு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கபீர் அஹமது தலைமை வகித்தார். ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநிலப் பேச்சாளர் பி.எம்.அல்தாபி கேள்விகளுக்கு பதிலளித்தார். மாநிலத் தலைவர் ஹாஜாநுக் , மாநில துணைப்பொதுச் செயலர் அப்துல் ஜலீல், கன்னியாகுமரி கிளைத் தலைவர் பீர்முகம்மது, செயலர் அப்துல்லாஹ், பொருளாளர் செய்யது அலி, துணைத் தலைவர் அமீர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விலைகுறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.