திசையன்விளையில் மீன் வியாபாரியை கார் ஏற்றிக் கொல்ல முயன்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திசையன்விளையை அடுத்த மணலிவிளையைச் சேர்ந்த சிம்சன் மகன் சுந்தர் (50). மீன் வியாபாரி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கோபால் மகன் மோகன்ராஜ் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாம். சனிக்கிழமை காலை சுந்தர் திசையன்விளை நான்குனேரி சாலையில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக காரில் வந்த மோகன்ராஜ் காரை வேகமாக ஓட்டி வந்து சுந்தர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் சுந்தர் பலத்த காயமடைந்தார். மோதிய காரை அங்கேயே நிறுத்திவிட்டு மோகன்ராஜ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, மோகன்ராஜை தேடி வருகின்றனர்.