மணவாளக்குறிச்சி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம மனிதர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம், கடியப்பட்டணம் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 13ஆம் தேதி அரசு விடுமுறை முடிந்து, வெள்ளிக்கிழமை காலை சுகாதார நிலைய அலுவலகத்தை திறக்கச் சென்றபோது சுகாதார நிலைய அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததாம்.
உள்ளே சென்று பார்த்தபோது ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு மருந்து பெட்டி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் மணவாளக்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.