வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் மானியத்தில் வேளாண் கருவிகள்

வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தோட்டப் பயிர், எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறையின் மூலம் மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசன கருவி மற்றும் டெலஸ்கோப்பிக் கியர் லாப்பர் கருவி
வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் மானியத்தில் வேளாண் கருவிகள்

வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் தோட்டப் பயிர், எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறையின் மூலம் மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசன கருவி மற்றும் டெலஸ்கோப்பிக் கியர் லாப்பர் கருவி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வாசுதேவநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்(பொ)இரா. மாரியப்பன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் நிகழாண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததாலும், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைவாக உள்ளதாலும், தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் தோட்டக்கலைத் துறை மூலம் சொட்டுநீர்ப் பாசன வசதி செய்து தரப்பட்டு வருகிறது.
மேலும், எலுமிச்சை சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் அமைந்துள்ள மரங்களின் நோய் தாக்கிய கிளைகள், தண்டு துளைப்பான் தாக்கிய கிளைகள், நீர்போத்துக் கிளைகள் மற்றும் காய்ந்த கிளைகள் போன்ற தேவையற்ற கிளைகளை மரத்துக்கு எவ்வித சேதமும் இன்றி வெட்டி எடுப்பதற்கு பிரத்யேகமாக டெலஸ்கோப்பிக் கியர் லாப்பர் எனும் கருவி தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுவோர், வாசுதேவநல்லூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com