நெல்லை: விபத்தில் காயமடைந்த தொழிலாளி உள்பட இருவர் சாவு

திருநெல்வேலியில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உள்பட இருவர் இறந்தனர்.

திருநெல்வேலியில் நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உள்பட இருவர் இறந்தனர்.
பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி சாலையைச் சேர்ந்தவர் சிந்தாமதார் (64). இவர் குறிச்சி சந்தை திருப்பத்தில் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மணிகண்டன் (32) என்பவர் மோட்டார் சைக்கிளில் சில தினங்களுக்கு முன் பாளையங்கோட்டைக்கு சென்றாராம். குலவணிகர்புரத்தை அடுத்த வீரமாணிக்கபுரத்தில் சென்றபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிந்தாமதார், அங்கு சனிக்கிழமை இறந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தொழிலாளி சாவு: கங்கைகொண்டான் அருகே சித்தன்பச்சேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). கூலித் தொழிலாளியான இவர் வேலை முடிந்து தனது சைக்கிளில் தாழையூத்தில் இருந்து கங்கைகொண்டான் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தாதனூத்து பகுதியில் வந்தபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் அங்கு சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com