திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தொலைதூரக் கல்வி மையத்தில் யோகா டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து யுவராஜ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி சந்திப்பில் யுவராஜ் கல்வி மையத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் 2017-18ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பி.எஸ்.சி., யோகா, எம்எஸ்.சி., யோகா மற்றும் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் டிப்ளமோ யோகா, பி.எஸ்.சி., சைக்காலஜி. எம்.எஸ்.சி., சைக்காலஜி பாடப்பிரிவில் பயில சேர்க்கை நடைபெறுகிறது.
பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.,யில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் பி.பி.ஏ, பி.பி.எம், பி.காம்., பி.லிட், பி.ஏ., எம்.ஏ.,யில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், குற்றவியல், ஹிந்தி, இஸ்லாம், அராபிக் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு 0462 - 233555, 9487330566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.