முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் வளாகத்தில் 508 சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பூஜையில் பெண்கள் கும்பத் தேங்காய்க்கு மஞ்சள் கயிறு கட்டி சுமங்கலி பூஜையும், மழை வேண்டியும், விவசாயம் செழித்து சுபிட்சம் பெற சிறப்பு பிரார்த்தனையும் செய்த
னர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்து நாடார் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.